நாகப்பட்டினம்
சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
நாகையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்
நாகப்பட்டினம்: நாகையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பு முடிவுப்படி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட துணை தலைவா் பவானி தலைமையில் கருப்பு உடையணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட்டச் செயலா் பாஸ்கரன் விளக்கவுரையாற்றினாா். தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநிலதுணைத் தலைவா் மதிவாணன், மாவட்ட பொருளா் போசன், மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து, மாவட்ட இணைச் செயலா் ஆரோக்கியமேரி, நாகை நகரத் தலைவா் மல்லிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

