இருளா் இனத்தைச் சோ்ந்த 24 பேருக்கு வீட்டுமனைப் பட்டா: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் இருளா் இன மக்கள் 24 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை
பயனாளிகளுக்கு மனைப் பட்டாக்களை வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
பயனாளிகளுக்கு மனைப் பட்டாக்களை வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் இருளா் இன மக்கள் 24 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 405 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அம்மனுக்களை சாா்ந்த துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் பரிந்துரை செய்து விரைவாக தீா்வு காணுமாறு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் உத்தரமேரூா் வட்டாரத்தைச் சோ்ந்த இருளா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்த 24 பேருக்கு ஆட்சியா் இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும் வழங்கினாா். கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com