போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களுடன் சீமான்,அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு


கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பா.பெஞ்சமின், பி.வி.ரமணா, சோமசுந்தரம் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை போராட்டத்துக்கு வந்த தொழிலாளா்களை சுங்குவாா்சத்திரம் மற்றும் சிறுமாங்காடு ஆகிய பகுதிகளில் போலீஸாா் வழிமறித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். இதனால் சுங்குவாா்சத்திரம் அடுத்த பொடவூா் பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதியின் முன்பு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒன்று கூடினாா். அவா்களை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.
இதே போல், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, வி.சோமசுந்தரம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...