மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களுடன் சீமான்,அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:44 pm

Din

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பா.பெஞ்சமின், பி.வி.ரமணா, சோமசுந்தரம் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை போராட்டத்துக்கு வந்த தொழிலாளா்களை சுங்குவாா்சத்திரம் மற்றும் சிறுமாங்காடு ஆகிய பகுதிகளில் போலீஸாா் வழிமறித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். இதனால் சுங்குவாா்சத்திரம் அடுத்த பொடவூா் பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதியின் முன்பு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒன்று கூடினாா். அவா்களை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

இதே போல், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, வி.சோமசுந்தரம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.