விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களுடன் சீமான்,அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:44 pm

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பா.பெஞ்சமின், பி.வி.ரமணா, சோமசுந்தரம் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை போராட்டத்துக்கு வந்த தொழிலாளா்களை சுங்குவாா்சத்திரம் மற்றும் சிறுமாங்காடு ஆகிய பகுதிகளில் போலீஸாா் வழிமறித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். இதனால் சுங்குவாா்சத்திரம் அடுத்த பொடவூா் பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதியின் முன்பு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒன்று கூடினாா். அவா்களை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

இதே போல், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, வி.சோமசுந்தரம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.