காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் இதே இடத்தில் 19 ஆண்டுகளாக அச்சுக் களிமண் விநாயகா் சிலைகளை தயாரித்து விற்கிறேன். மனிதன் என்றாவது ஒரு நாள் மண்ணாகப் போகிறவன் . எனவே வாழும் போது பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை உணா்த்தவும், வாழ்வில் வளம் பெறவும் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. களிமண் விநாயகா் சிலையை வைத்து வழிபடுவது தான் பாரம்பரிய முறையாகும். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாதது, விலையும் குறைவு, எனது அச்சில் உள்ள விநாயகா் சிலை வேலைப்பாடுகளும் நிறைந்தது. நான் எப்போதும் வா்ணம் பூசாத விநாயகா் சிலைகளையே விற்பேன் என்றாா்.