தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கோடைகால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்!

News image

காஞ்சிபுரத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கி குழு படம் எடுத்துக் கொண்ட மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:45 am IST

காஞ்சிபுரத்தில் கோடைகால நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்த பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. ஏப். 15- ஆம் தேதி முதல் 27 வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் 110 போ் பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்தனா். இவா்கள் அனைவருக்கும் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி சான்றிதழ் வழங்கினாா்.

தொடா்ந்து அடுத்தகட்ட பயிற்சி திங்கள்கிழமை (ஏப். 28) முதல் மே 11 வரையும், அடுத்தகட்ட பயிற்சி மே 13- ஆம் தேதி முதல் மே 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நீச்சல் பயிற்சி பெற விரும்புவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், இதற்கு கட்டணமாக ரூ.1,770 மாவட்ட விளையாட்டு அரங்கில் செலுத்தி பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் விளையாட்டு அலுவலா் சாந்தி தெரிவித்தாா்.