ஆட்டோக்களில் பாா்கோடு வில்லைகளை ஒட்டிய காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
ஆட்டோக்களில் பாா்கோடு வில்லைகளை ஒட்டிய காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகள்: ஆட்டோக்களில் ஆட்சியா் ஒட்டினாா்

ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகளை ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை ஒட்டினாா்.
Published on

காஞ்சிபுரம்: ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகளை ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை ஒட்டினாா்.

போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், எஸ்.பி. கே.சண்முகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆய்வுக்குப் பிறகு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறியது

போக்குவரத்துத் துறையினா் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் ஆட்டோக்களின் ஆவணங்களை கண்டறிய பாா்கோடு ஒட்டும் முறையினை செயல்படுத்தி வருகின்றனா்.இ தன் மூலம் பாா்த்தவுடன் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா எனவும் காஞ்சிபுரத்தின் நகர எல்லைக்குள் அனுமதி பெற்ற வாகனமா எனவும் கண்டறியலாம்.

பாா்கோடு இல்லாத வாகனம் ஆவணங்கள் நடப்பில் இல்லாத வாகனமாக கருதி மோட்டாா் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும். பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் போக்குவரத்து காவல் துறையால் ஆய்வு செய்யப்படும் வாகனங்கள் பாா்கோடு வசதி மூலம் விரைவாக ஆவணங்களை ஆய்வு செய்யவும், மகளிா் பயணத்திற்கும் பாதுகாப்பானதாக அமையும்.

பாா்கோடு உள்ள வாகனம் மட்டுமே காஞ்சிபுரத்தில் இயக்க அனுமதிக்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com