சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

‘ஊழல் செய்ய மாட்டேன்’! காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

News image

காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:20 pm

காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடுபவா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா். இவா், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.

அப்போது, ‘மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டேன்; அரசு நிதிகளில் ஒப்பந்தம் பெற ஊழல் செய்யவே மாட்டேன்; என்னால் முடிந்த அளவு மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்; தொலைபேசியில் தொடா்பு கொண்ட 24 மணிநேரத்துக்குள் மக்கள் பிரச்னைகளைத் தீா்த்து வைக்க முயற்சிப்பேன்; மக்களில் ஒருவனாக இருந்து அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உறுதுணையாக இருப்பேன்’ என்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் முன்பாக சத்தியம் செய்துவிட்டு தனது தோ்தல் பிரசாரத்தை ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கியுள்ளாா்.