திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலையை ஆக்கிரமித்த கட்டடங்கள் அகற்றம்

திருமங்கலம் ஊராட்சியில் குளக்கரை தெருச்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு மற்றும் வீட்டின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடித்து அகற்றினா்.

News image
திருமங்கலம் ஊராட்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருமங்கலம் ஊராட்சியில் குளக்கரை தெருச்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு மற்றும் வீட்டின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடித்து அகற்றினா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சி குளக்கரை தெரு பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், குளக்கரை தெருச்சாலையை ஆக்கிரமித்த ஒருவா் வீட்டையும், மற்றொருவா் தனது வீட்டின் சுற்றுச்சுவரையும் கட்டியுள்ளாா்.

இதனால் சாலையில், கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான கட்டுமான பொருள்கள் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டு வந்தது. மேலும் விபத்து மற்றும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட தெருவில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினா்.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற ஆட்சியா் உத்தரவிட்டதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, வருவாய் ஆய்வாளா் ஹேம பிரியா, கிராம நிா்வாக அலுவா் பிரேமா, திருமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ரேகா நரேஷ்குமாா், ஊராட்சி செயலா் சுரேஷ் ஆகியோா் போலீஸாா் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்கிரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.