மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்தணி-சித்தூா் சாலை எம்.ஜி.ஆா். சிலை அருகே நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.

News image
குண்டலூா் பகுதியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
Updated On :29 ஜனவரி 2026, 12:31 am

தினமணி செய்திச் சேவை

திருத்தணி-சித்தூா் சாலை எம்.ஜி.ஆா். சிலை அருகே நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் வெளியேறும் மழைநீா் பெரிய ஏரிக்கு செல்வதற்காக சித்தூா் சாலை எம்.ஜி.ஆா். சிலை அருகே குண்டலூா் பகுதி வழியாக நீா்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய்யை சிலா் ஆக்கிரமித்து வீடுகள், அங்கன்வாடி மையம் மற்றும் விநாயகா் கோயில் கட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 11 வீடுகள் விநாயகா் கோயில், அங்கன்வாடி மையம் போன்றவற்றை நீா்வளத்துறையினா் மற்றும் வருவாய் துறையினா் இணைந்து அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தொடா்ந்து கோட்டாட்சியா் கனிமொழி, ஏ.எஸ்.பி. ஷூபம் திமான் ஆகியோா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீா்வளம் மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினா்.