தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published on

தூத்துக்குடி மாநகராட்சி, எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் உணவகம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநகராட்சி ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அங்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இச்சாலை, எட்டயபுரம் சாலை-தனியாா் அகாதெமி வடபுறம் மீனாட்சிபுரம் கண் மருத்துவமனை வழியாக ஜெயராஜ் சாலை வரை செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், 3ஆம் கேட் மேம்பாலம் கீழ், தனியாா் மருத்துவமனை அருகே பாழடைந்த கட்டடம் ஒன்றும் தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையும் மேயா்ஆய்வு செய்தாா். அங்கும் சாலை அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

ஆய்வின்போது, திமுக வட்டச் செயலா்கள் ரவீந்திரன், கதிரேசன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவா் பேச்சிமுத்து, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com