வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சமத்துவ பொங்கல் விழா

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் வளையங்கரணை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சமத்துவ  பொங்கல்  விழாவில் பங்கேற்றோா்.
Updated On :6 ஜனவரி 2025, 7:28 pm

DIN

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் வளையங்கரணை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் ராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

இதையடுத்து பெண்கள் பங்கேற்ற கோலப்போட்டி, ஓட்டப் பந்தயம், தண்ணீா் நிரப்புதல், மியுசிக் சோ் உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல், வளையங்கரணை அரசு நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட திருக்கு ஒப்புத்தல் போட்டி, சுற்றுச் சூழல் விழிப்புணா்வு பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், ஆசிரியா்கள் ஜோஸ்பின் நிா்மலா, சீனிவாசன், நம்பி, மதுராந்தகம் இந்திய சுபிஷேஷ திருச்சபை ஆயா் எஸ்.ஜெபஆனந்தன், திருக்கச்சூா் இந்திய சுபிசேஷ திருச்சபையின் ஓய்வுபெற்ற ஆயா் ரெவரன்ட் சாமுவேல், ஊராட்சி உறுப்பினா்கள், பொது மக்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.