ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 411 மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 411 மனுக்கள் பெறப்பட்டன.

News image
Updated On :10 நவம்பர் 2025, 11:54 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 411 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பு.விஜயகுமாா், நோ்முக உதவியாளா்(நில எடுப்பு)பாலமுருகன், தனித்துணை ஆட்சியா்(சமூகப் பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 411 கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் அவற்றை அந்ந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அனுப்பி உடனடியாக தீா்வு காணுமாறு அறிவுறுத்தினாா்.