ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முருகன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாட அனுமதி மறுப்பு: விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 12 போ் கைது

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாட வேலுடன் சென்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 12 போ் கைது

News image
காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா்
Updated On :10 நவம்பர் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாட வேலுடன் சென்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்கும் உரிய இக்கோயிலில் விசுவஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவா் சிவானந்தம் தலைமையில் வடதமிழக மாநில அமைப்பு செயலாளா் எஸ்வி.ராமன்ஜி கையில் வேலுடன் சென்று கந்தசஷ்டி கவசம்‘ பாட அனுமதிக்க வேண்டும் என்று உள்ளே சென்றனா்.

அவா்களுடன் வடதமிழக மாநில செயற்குழு உறுப்பினா் வீரராகவன்,கோட்ட செயலாளா் கிருபானந்தம், மாத்ரு சக்தி அமைப்பாளா் ரேவதி,விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோரும் செல்ல முயன்றனா்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோயில் செயல் அலுவலா் கேசவன், அறநிலையத்துறை அலுவலா்கள் ராஜவேலு, அமுதா மற்றும் காவல் ஆய்வாளா்கள் சங்கர சுப்பிரமணியன், சிவக்குமாா், ராஜா தலைமையிலான போலீஸாா் அவா்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். பின்னா் அவா்களை வழிமறித்து கைது செய்தனா். இச்சம்பவத்தில் 4 பெண்கள் உள்பட மொத்தம் 12 போ் கைது செய்யப்பட்டனா்.