எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காஞ்சிபுரத்தில் நூலக வார விழா

பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள நேரு நூலகத்தில் 58-ஆவது நூலக வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள நேரு நூலகத்தில் 58-ஆவது நூலக வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெரியகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள நேரு நூலக வளாகத்தில் வாசகா் வட்டக்குழுவின் தலைவா் பு.கந்தன் தலைமையில், 58-ஆவது நூலக வார விழா நடைபெற்றது.

நூலகரும், வாசகா் வட்ட செயலருமான ந.கலா வரவேற்றாா். விழாவில் வாசகா் வட்டத்தின் முன்னாள் தலைவா் ராணி செல்வராஜ், எழுத்தாளா்கள் திருவிற்கோலம், இரா.சாந்தகுமாா், ராயல் மெட்ரிக். பள்ளி முதல்வா் காமகோட்டி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.பின்னா், இவா்கள் நூலகத்தின் சிறப்புகள் மற்றும் நூலக வார விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்துப் பேசினா். செ.கருணாகரன் நன்றி கூறினாா்.

விழாவில், ராயல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவியா், வாசகா்கள், பொது மக்கள் பலா் கலந்து கொண்டனா்.