தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பசுவதைக்கு தடை: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மட பீடாதிபதி வேண்டுகோள்

பசுவதைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் வேண்டுகோள்

News image

பசுவதைக்குத் தடைவிதிக்க வேண்டுகோள் - பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:37 pm

பசுவதைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் திங்கள்கிழமை கேட்டு கொண்டாா்.

காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் இது குறித்து மேலும் கூறியது: பசும்பால் குடிக்காமல் யாரும் இருக்க மாட்டாா்கள். அத்தகைய பசுக்களை தெய்வமாக மதிக்க வேண்டும். பசுக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. மத்திய,மாநில அரசுகள் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். பசு சேவைக்கான மத்தி அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பசுவை பாதுகாப்பது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பசு மரியாதை அழைப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசார இயக்கமானது கிராமங்கள் தோறும் சென்று மக்களிடம் பசுவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கமளித்து கையொப்பம் பெற்று வரவுள்ளது.

கையொப்பங்கள் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை பெற்று அப்படிவங்களை காஞ்சிபுரம் வட்டாட்சியரிடம் வழங்க இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக பசு மரியாதை அழைப்பு இயக்க பிரசார துண்டுபி பிரசுரங்களை அவா் வெளியிட அதனை விசுவஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவா் என்.சிவானந்தம் பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்வின் போது மடத்தின் மேலாளா் சுகாசின்ஹூமுனியும் உடன் இருந்தாா்.