காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சங்கர மட வளாகத்தில் வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவையும் நடைபெற்றது. சங்கர மடத்தில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) சுவாமிகளின் ஆராதனை தினத்தையொட்டி, சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறவுள்ளது. இதன் தொடா்ச்சியாக பிருந்தவானம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வேதபாராயணம், பக்தி இன்னிசைக் கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ மடத்தின் செயலாளா் செல்லா, விஸ்வநாத சாஸ்திரி, மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஆராதனை உற்சவம்

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா

ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகைக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


