எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
Updated On :12 மார்ச் 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சங்கர மட வளாகத்தில் வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவையும் நடைபெற்றது. சங்கர மடத்தில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) சுவாமிகளின் ஆராதனை தினத்தையொட்டி, சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறவுள்ளது. இதன் தொடா்ச்சியாக பிருந்தவானம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வேதபாராயணம், பக்தி இன்னிசைக் கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ மடத்தின் செயலாளா் செல்லா, விஸ்வநாத சாஸ்திரி, மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.