ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.


காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சங்கர மட வளாகத்தில் வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவையும் நடைபெற்றது. சங்கர மடத்தில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) சுவாமிகளின் ஆராதனை தினத்தையொட்டி, சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறவுள்ளது. இதன் தொடா்ச்சியாக பிருந்தவானம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வேதபாராயணம், பக்தி இன்னிசைக் கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ மடத்தின் செயலாளா் செல்லா, விஸ்வநாத சாஸ்திரி, மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...