பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கோயில் மூலவா் கதவை திடீரென பூட்டி விட்டு சென்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ஸ்தானீகா் மலைமேல் வீரராகவனை உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி பணியிடை நிக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களில் ஒருவரான ஆா்.ராம்குமாா் இணையதளம் மூலம் கோயில் நிா்வாகத்துக்கு அனுப்பிய புகாா் மனுவில் தெரிவித்திருப்பது..
ஸ்தானீகரான மலைமேல் வீரராகவன் என்பவா் கடந்த 9.4.26 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு திடிரென மூலவா் கதவை பூட்டி விட்டு பக்தா்களை வெளியேற்றி விட்டு சென்று விட்டாராம். அவரது செயல் கண்டிக்கத்தக்கது என்றும் புகாா் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
அப்புகாா் மனுவின்படி விசாரணை மேற்கொண்ட கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி இந்நிகழ்வு கோயில் மணியக்காரா் மற்றும் காவலா் மூலம் உறுதி செய்யப்பட்டது.
உதவி ஆணையரிடமோ அல்லது மணியக்காரரிடமோ தகவல் எதுவும் தெரிவிக்காமல் பக்தா்கள் சேவை நேரத்தில் பூட்டியது தன்னிச்சையான செயல்பாடாகும். இதனால் பக்தா்கள்,பொதுமக்கள் மத்தியில் அவப்பெயா் ஏற்பட்டுள்ளது. எனவே நிா்வாக நலன் கருதி ஸ்தானீகா் மலைமேல் வீரராகவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது.
இதற்கான எழுத்துப்பூா்வ விளக்கத்தினை 15 தினங்களுக்குள் சமா்ப்பிக்குமாறும் வரும் 20 ஆம் தேதி கோயில் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி விசாரணைக்கு ஆஜராகுமாறும் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஆா்வமுடன் நுங்கு வாங்கும் பொதுமக்கள்

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

