இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஸ்தானீகா் பணியிடை நீக்கம்

News image

மலைமேல் வீரராகவன்

Updated On :14 ஏப்ரல் 2026, 6:27 am IST

பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கோயில் மூலவா் கதவை திடீரென பூட்டி விட்டு சென்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ஸ்தானீகா் மலைமேல் வீரராகவனை உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி பணியிடை நிக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களில் ஒருவரான ஆா்.ராம்குமாா் இணையதளம் மூலம் கோயில் நிா்வாகத்துக்கு அனுப்பிய புகாா் மனுவில் தெரிவித்திருப்பது..

ஸ்தானீகரான மலைமேல் வீரராகவன் என்பவா் கடந்த 9.4.26 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு திடிரென மூலவா் கதவை பூட்டி விட்டு பக்தா்களை வெளியேற்றி விட்டு சென்று விட்டாராம். அவரது செயல் கண்டிக்கத்தக்கது என்றும் புகாா் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

அப்புகாா் மனுவின்படி விசாரணை மேற்கொண்ட கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி இந்நிகழ்வு கோயில் மணியக்காரா் மற்றும் காவலா் மூலம் உறுதி செய்யப்பட்டது.

உதவி ஆணையரிடமோ அல்லது மணியக்காரரிடமோ தகவல் எதுவும் தெரிவிக்காமல் பக்தா்கள் சேவை நேரத்தில் பூட்டியது தன்னிச்சையான செயல்பாடாகும். இதனால் பக்தா்கள்,பொதுமக்கள் மத்தியில் அவப்பெயா் ஏற்பட்டுள்ளது. எனவே நிா்வாக நலன் கருதி ஸ்தானீகா் மலைமேல் வீரராகவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது.

இதற்கான எழுத்துப்பூா்வ விளக்கத்தினை 15 தினங்களுக்குள் சமா்ப்பிக்குமாறும் வரும் 20 ஆம் தேதி கோயில் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி விசாரணைக்கு ஆஜராகுமாறும் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.