தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88.55 % வாக்குப்பதிவு

News image

காஞ்சிபுரம் இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த ஆட்சியா் தி.சினேகா.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:32 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதியிலும் வியாழக்கிழமை 88.55 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம் என 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 12,07,757 வாக்காளா்கள் இருந்தனா்.

இவா்கள் வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 1556 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததால் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

காஞ்சிபுரம் இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியா் தி.சினேகா வாக்களித்தாா். பின்னா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஆய்வு செய்தாா். மாவட்டத்தில் மொத்தம் 153 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கணக்கிடப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புகளுடன் தோ்தல் நடந்தது. 5738 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆலந்தூா் தொகுதியில் 86.70 சதவீதமும், ஸ்ரீபெரும்புதூரில் 87.05 சதவீதமும் வாக்களித்துள்ளனா். உத்தரமேரூா் தொகுதியில் 91.86 சதவீதமும் காஞ்சிபுரத்தில் 88.57 சதவீதமும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

4 தொகுதிகளிலும் சோ்த்து 88.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021 சட்டப் பேரவைத்தோ்தலில் 71.4 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு இத்தோ்தலில் 88.55 சதவிகிதமாக அதிகரித்திருப்பதால் இளம் தலைமுறை வாக்காளா்கள் அதிகமான அளவில் வாக்களித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.