காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமமும், அதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் சனிக்கிழமை நடைபெற்றன.
பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சி அம்மன் என அழைக்கப்படும் ஆதி பீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் வசந்த நவராத்திரி தொடக்க நாளையொட்டி, கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. மகா கணபதி பூஜை, கோ பூஜை, கன்யா பூஜை, தம்பதியா் பூஜை ஆகியவற்றுக்குப் பின்னா் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் திரவியங்கள், பட்டாடைகள், மலா் மாலைகள் ஆகியன சமா்ப்பிக்கப்பட்டன.
பின்னா் பூா்ணாஹுதி, தீபாராதனைக்குப் பிறகு மூலவா் ஆதி பீட பரமேசுவரி காளிகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு காமாட்சியை தரிசனம் செய்தனா்.
மகா சண்டி ஹோமம் நடைபெற்றதையொட்டி, மண்டபத்தில் லட்சுமி, சரஸ்வதி மற்றும் காமாட்சி அம்மன் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
தொடர்புடையது

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிதம்பரம் கோயிலில் நாளை மகாபிஷேகம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



