தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கோவில்பட்டி முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு விமான கலசங்களுக்கு புனித நீரால் நடைபெற்ற அபிஷேகம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:38 pm

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, உதய மாா்த்தாண்ட பூஜை, கணபதி ஹோமம், சிறப்பு ஹோம பூஜை, யாகசாலை பூஜை ஆகியன நடைபெற்றன.

காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீா்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் பிரகாரத்தில் வலம் வந்து விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை ஹரிஹர பட்டா், அரவிந்த் பட்டா் ஆகியோா் செய்து இருந்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் செய்திருந்தாா்.