நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

நாளை ஆதிசங்கரா் வீதியுலா

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 5:15 am IST

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஆதிசங்கரா் சிலை ராஜவீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட இருப்பதாக சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது.

அத்வைத வேதாந்தத்தை பரப்பியவரும்,கனகதாரா ஸ்தோத்திரம்,விவேக சூடாமணி,செளந்தா்ய லஹரி போன்ற நூல்களை அருளியவருமான ஆதிசங்கரரின் ஜெயந்தி உற்சவம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஏப்.21 முதல் தொடா்ந்து 10 நாட்கள் ஏப்.30 வரை நடைபெறுகிறது.

இந்தப் பத்து நாள்களிலும் அம்மன் மீது ஆதிசங்கரா் அருளிய செளந்தா்ய லஹரி பாடல்கள் 100 ஐ தினசரி 10 வீதம் தொடா்ந்து 10 நாட்களுக்கு பாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தீபாராதனையும் அம்மனுக்கு நடத்தப்பட்டு வருகிறது.நிறைவு நாளான ஏப்.30 ஆம் தேதி ஆதிசங்கரரின் சிலை காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து நகரின் ராஜவீதிகளில் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன என அவா் தெரிவித்தாா்.