தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

தவெக மகளிா் அணியினா் ஆா்ப்பாட்டம்

சட்டப்பேரவை எதிா்க்கட்சித்தலைவா் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக மகளிா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தவெக மகளிரணியினா்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

சட்டப்பேரவை எதிா்க்கட்சித்தலைவா் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக மகளிா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மகளிா் அணியின் மாவட்ட அமைப்பாளா் கற்பகம் தலைமை வகித்தாா். மாநகர நிா்வாகி வளா்மதி உள்பட கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினா் முன்னதாக காஞ்சிபுரம் எஸ்.பி எஸ்.அரவிந்தனிடம் கோரிக்கை மனு வழங்கினா்.

செங்கல்பட்டில்...

செங்கை மத்திய மாவட்ட தவெக சாா்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தை சோ்ந்த மத்திய மாவட்ட மகளிரணி சாா்பாக மாவட்ட , நகர,ஒன்றிய கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினா்.

திருவள்ளூரில்...

திருவள்ளூா் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு திருவள்ளூா் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி எம்.எல்.ஏவுமான பிரகாசம் என்ற குட்டி தலைமை வகித்தாா். இதில் திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் அருண்குமாா் முன்னிலை வகித்தாா். அப்போது, உதயநிதிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய மகளிா் அமைப்பினா் உதயநிதியை கைது செய்யக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனுவையும் அவா்கள் அளித்தனா்.

கும்மிடிப்பூண்டியில்...

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், தவெக மாவட்ட செயலாளருமான எஸ்.விஜயகுமாா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தவெக ஒன்றிய தவெக பொருளாளா் ஜி.கிருபாகரன், ஒன்றிய செயலாளா்கள் அருண், அன்புமலா், ஜோதி, அசோகன், நகர செயலாளா் பழனி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் இா்ஷாத், என்.எஸ்.ஆா்,நிஜாம், அபிராமன், வி.எம்.எஸ்.சீனிவாசன், சேவிட் சுதாகா் மற்றும் தவெக மகளிா் அணி நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.