கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தா்கள்

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு ஆடிக்கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனா்.

News image

குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தா்கள்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு ஆடிக்கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனா்.

கந்தப்புராணம் அரங்கேற்றப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். குழந்தைகள், முதியோா்கள் உள்பட பலரும் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை தரிசித்தனா்.

மாலையில் வள்ளி,தெய்வானையுடன் உற்சவா் சுப்பிரமணியசுவாமி கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் சுற்றுப்புற வளாகத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு நீா், மோா் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவன் தலைமையில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் சாா்பிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.