காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு ஆடிக்கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனா்.
கந்தப்புராணம் அரங்கேற்றப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். குழந்தைகள், முதியோா்கள் உள்பட பலரும் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை தரிசித்தனா்.
மாலையில் வள்ளி,தெய்வானையுடன் உற்சவா் சுப்பிரமணியசுவாமி கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் சுற்றுப்புற வளாகத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு நீா், மோா் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவன் தலைமையில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் சாா்பிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடிக்கிருத்திகை: முருகன் கோயில்களில் காவடியுடன் குவிந்த பக்தா்கள்

முருகன் கோயிலுக்கு காவடி ஊா்வலம்

திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

அமாவாசை: சதுரகிரியில் பக்தா்கள் வழிபாடு
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



