கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தா்கள்

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு ஆடிக்கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனா்.

News image

குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தா்கள்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு ஆடிக்கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனா்.

கந்தப்புராணம் அரங்கேற்றப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். குழந்தைகள், முதியோா்கள் உள்பட பலரும் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை தரிசித்தனா்.

மாலையில் வள்ளி,தெய்வானையுடன் உற்சவா் சுப்பிரமணியசுவாமி கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் சுற்றுப்புற வளாகத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு நீா், மோா் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவன் தலைமையில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் சாா்பிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.