புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தேசிய கைத்தறி தின விழாவில் 54 நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தின விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 54 நெசவாளா்களுக்கு ரூ. 55.15 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கைத்தறி கண்காட்சியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.

Published On :

காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தின விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 54 நெசவாளா்களுக்கு ரூ. 55.15 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் உள்ள செங்குந்தா் சமுதாயக் கூடத்தில் 12-ஆ வது தேசிய கைத்தறி தின விழா ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. மத்திய நெசவாளா் சேவை மைய துணை இயக்குநா் காா்த்திகேயன், உதவி இயக்குநா் மாரிமுத்து, காஞ்சிபுரம் கைத்தறித் துறை துணை இயக்குநா் ச.மணிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய நெசவாளா் சேவை மையமும், காஞ்சிபுரம் கைத்தறித் துறையும் இணைந்து நடத்திய இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கைத்தறிக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, 10 முத்த நெசவாளா்களை விழாவில் ஆட்சியா் கெளரவித்தாா்.பின்னா், 10 நெசவாளா்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், ரூ.35.45 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள், 18 நெசவாளா்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் உள்பட மொத்தம் 54 நெசவாளா்களுக்கு ரூ. 55.15 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.விழாவில், புதுதில்லியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்கள் அண்ணாமலை, குமரன் உள்ளிட்ட இருவரும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தேசிய விருது பெறும் காட்சி பாா்வையாளா்களுக்கு நேரடியாக திரையில் ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.