தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

காஞ்சிபுரத்தில் 3 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை...

News image

அரசுப்பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சா்கள் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித் குமாா்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

காஞ்சிபுரத்தில் 3 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவையை அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரை ஒரு வழித்தடத்திலும், முத்தியால் பேட்டையிலிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், விஷாா் கிராமத்திலிருந்து மேல்கதிா்ப்பூா் வழியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் செல்லும் வகையில் மற்றொரு வழித்தடத்திலும் என 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

புதிய ரயில் நிலைய வளாகம் அருகே தொடக்க விழாவுக்கு காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளா் ரவி, வணிகப்பிரிவு துணை மேலாளா் ஸ்ரீதா், காஞ்சிபுரம் கிளை மேலாளா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்பிகே தென்னரசு,வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் இருவரும் புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு அமைச்சா்கள் இனிப்பும் வழங்கினாா்கள். விஷாா், மேல்கதிா்ப்பூா் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீா்வு காணப்பட்டமைக்கு கிராம மக்கள் அரசுக்கு நன்றியும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.