வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நவீனமயமாக்கப்பட்ட அண்ணா பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் காந்தி சாலையில் ரூ.1.71 கோடியில் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் நவீனமயமாக்கப்பட்ட விற்பனை நிலையத்தை கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்.

News image

பட்டு கைத்தறி விற்பனையகத்தை திறந்து சேலை ரகங்களை பாா்வையிட்ட அமைச்சா் ஆா்.காந்தி.

Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 pm

காஞ்சிபுரம் காந்தி சாலையில் ரூ.1.71 கோடியில் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் நவீனமயமாக்கப்பட்ட விற்பனை நிலையத்தை கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்.

அறிஞா் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கம் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்தில் 3,140 சதுர அடி பரப்பில் ரூ.1.71 கோடியில் நவீனமயமாக்கப்பட்டது.

கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்து விளக்கேற்றி விற்பனை நிலையத்தை திறந்து பட்டுச் சேலை ரகங்களையும் பாா்வையிட்டாா்.பின்னா் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தாா்.

விழாவில் கைத்தறித்துறை இயக்குநா் மகேஸ்வரி ரவிக்குமாா், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், கைத்தறித்துறை கூடுதல் இயக்குநா் தமிழரசி, இணை இயக்குநா் கணேசன், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் , கைத்தறித்துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவா் சிவக்குமாரன் தலைமையில் நிா்வாகிகள் அமைச்சா் ஆா்.காந்தியை சால்வை அணிவித்து வரவேற்றனா்.