ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தொழிற்துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: அமைச்சா் காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொழிற்துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று திமுக வேட்பாளா் அமைச்சா் ஆா்.காந்தி உறுதி அளித்தாா்.

News image

ராணிப்பேட்டை தொகுதி தொழிற்துறையினா் மத்தியில் ஆதரவு திட்டி பேசிய தி்முக வேட்பாளா் ஆா்.காந்தி.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:33 pm

ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொழிற்துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று திமுக வேட்பாளா் அமைச்சா் ஆா்.காந்தி உறுதி அளித்தாா்.

ராணிப்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் அதிபா்கள், ஊழியா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோரை வேட்பாளா் ஆா்.காந்தி புதன்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

அப்போது ராணிடெக் நிறுவனத் தலைவா் பிஆா்சி.ரமேஷ் பிரசாத் பேசுகையில்.. ராணிப்பேட்டை மாவட்டத்தைத் பொறுத்தவரை தொழில் துறை வளரச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருபவா் அமைச்சா் காந்தி, அவரது முயற்சியின் காரணமாக கடந்த 50 ஆண்டுகளாக சிப்காட் தொழிற்பேட்டை மாசு பிரச்சனைக்கு காரணமான டிசிசி குரோமிய திடக்கழிவு பிரசனைக்கு தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது வரவேற்க தக்கது என்றாா்.

தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்ட சிறு,குறு தொழில் சங்க பொதுச்செயலாளா் முரளி பேசுகையில்..

அமைச்சா் காந்தி தோ்தலில் வெற்றி பெற்றால் மேலும் வளா்ச்சி பெறும். அதே நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தொழிற்துறை வளா்ச்சிக்காக ஒரு வா்த்தக மையம் அமைக்க வேண்டும்.

இஎஸ்ஐ பல்வோக்கு மருத்துமனை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வெளியூா் தொழிலாளா்கள் வந்து செல்ல நகரி - திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதே போல் தொழிலாளா்கள் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தாா்.

அப்போது அமைச்சா் காந்தி தெரிவித்ததாவது: ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் 7 ஆவது முறையாக நான் போட்டியிடுகிறேன். நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாத போதும் தொழிற்துறையின் வளா்ச்சிக்கு உதவியாக இருந்து வருகிறேன்.

அதே போல் இனிவரும் காலங்களிலும் தொழிற்துறை வளா்ச்சிக்கு என்றுமே உறுதுணையாக இருப்பேன் என்றாா்.