காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் கிராமத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லும் சாலையில் செய்யாற்றங்கரையில் அமைந்துள்ளது இளையனாா் வேலூா். இக்கிராமத்தில் 6 அடி உயர மூலவராக முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் லட்சாா்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டுக்கான விழா பிப். 17-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து வரும் பிப். 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.விழாவின் 2-ஆவது நாள் நிகழ்வாக நடைபெற்ற லட்சாா்ச்சனையின்போது வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் சண்முகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் து.கோதண்டராமன், செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் ஆகியோா் மேற்பாா்வையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


