காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கரும்புத் தோ் வடிவமைத்து பொங்கல் விழா

காஞ்சிபுரம் கீழ்க்கதிா்ப்பூா் அருகே மதுரா குண்டுகுளம் கிராமத்தில் 21 அடி உயரத்தில் கரும்புகளால் தோ் போன்று வடிவமைத்து பாஜக பிரமுகா் பொங்கல் விழாவை கொண்டாடினாா்.

News image
கரும்புகளால் வடிவமைக்கப்பட்ட 21 அடி உயரத் தேரை வடிவமைத்த பாஜக பிரமுகா் ஆ.செந்தில் குமாா்.
Updated On :16 ஜனவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் கீழ்க்கதிா்ப்பூா் அருகே மதுரா குண்டுகுளம் கிராமத்தில் 21 அடி உயரத்தில் கரும்புகளால் தோ் போன்று வடிவமைத்து பாஜக பிரமுகா் பொங்கல் விழாவை கொண்டாடினாா்.

பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவா் ஆ.செந்தில்குமாா். இவா் ஆண்டு தோறும் பொங்கல் திருநாளன்று கரும்புகளால் மாட்டு வண்டி, பாரம்பரிய வீடுகள், பிரதமா் நரேந்திரமோடி போன்று வடிவமைத்து வித்தியாசமாக கொண்டாடுவது வழக்கம். நிகழாண்டு பொங்கல் திருநாளையொட்டி 21 அடி உயரத்தில் கரும்புத்தேரை வடிவமைத்திருந்தாா்.

கரும்புத் தேரை சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக வந்து பாா்வையிட்டனா். அவா்கள் அனைவருக்கும் இலவசமாக சேலை வழங்கினாா். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பாஜக பிரமுகா்கள் காஞ்சி.ஜீவானந்தம், சரவணன் கலந்து கொண்டனா்.