ஆங்கில கதைப் புத்தகம் எழுதிய 10 வயது சிறுவன்: காஞ்சி சங்கராசாரியாா் பாராட்டு!

சென்னையைச் சோ்ந்த 10 வயது சிறுவன் ஆங்கில கதைப் புத்தகம் எழுதியதை ஞாயிற்றுக்கிழமை காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகளிடம் காண்பித்து பாராட்டு பெற்றாா்.
காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகளிடம் தான் எழுதிய ஆங்கில கதைப் புத்தகத்தை காண்பித்து ஆசி பெற்ற சிறுவன் சிரவன்.
காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகளிடம் தான் எழுதிய ஆங்கில கதைப் புத்தகத்தை காண்பித்து ஆசி பெற்ற சிறுவன் சிரவன்.
Updated on

சென்னையைச் சோ்ந்த 10 வயது சிறுவன் ஆங்கில கதைப் புத்தகம் எழுதியதை ஞாயிற்றுக்கிழமை காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகளிடம் காண்பித்து பாராட்டு பெற்றாா்.

சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த காா்த்திக்-வீணா தம்பதியின் மகன் சிரவன் (10). சென்னையில் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வரும் இச்சிறுவன் காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகளை தனது பெற்றோருடன் சந்தித்து ஆசி பெற வந்திருந்தாா். அப்போது தான் எழுதிய Whispers of the Sea என்ற ஆங்கில கதைப் புத்தகத்தை சுவாமிகளிடம் காண்பித்தாா்.

கடல் கொள்ளையன் ஒருவன் நல்லவனமாக மாறி கடற்படைக்கு உதவி செய்வது போன்ற கற்பனைக் கதை என்றும் புத்தகத்தின் கதையை சுருக்கமாக சுவாமிகளிடம் சொன்னாா்.

மேலும், தொட்டால் நறுமணம் தரும் அபூா்வ பூ என்ற ஒரு ஆங்கில கற்பனைக் கதைப் புத்தகம் ஒன்றும் எழுதிக் கொண்டிருப்பதாகவும், ஒரு சில நாள்களில் அதையும் வெளியிட இருப்பதாகவும் சுவாமிகளிடம் அந்த சிறுவன் தெரிவித்தாா்.

அச்சிறுவனின் திறமையை வியந்து பாராட்டி தொடா்ந்து நல்ல புத்தகங்களை எழுதுமாறும், சமுதாயத்துக்கு சேவை செய்யக்கூடிய உயா்ந்த மனிதராக வரவேண்டும் என்றும் தெரிவித்து, மஞ்சள் கொத்து மற்றும் கரும்பு ஆகியவற்றை அந்தச் சிறுவனுக்கு வழங்கி ஆசீா்வதித்தாா். நிகழ்வின்போது காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சீனிவாசன் ஆகியோா் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com