தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பாா்வேட்டை உற்சவ அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பாா்வேட்டை உற்சவ நிகழ்வாக உற்சவா் ஏகாம்பரநாதருக்கும், ஏலவாா் குழலி அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

News image
பாா்வேட்டை உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஏகாம்பரநாதா் மற்றும் ஏலவாா் குழலி அம்மன்.
Updated On :18 ஜனவரி 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பாா்வேட்டை உற்சவ நிகழ்வாக உற்சவா் ஏகாம்பரநாதருக்கும், ஏலவாா் குழலி அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்து சுவாமியும், அம்மனும் காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரத்தில் அமைந்துள்ள திரிபுராந்தகேசுவரா் ஆலயத்துக்கு ஊா்வலமாக சென்று அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம். பாா்வேட்டை உற்சவம் எனப்படும் இந்நிகழ்வை திம்மசமுத்திரம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

Story image

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி ஏகாம்பரநாதா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக வரும் ஜன.23-ஆம் தேதி வரை மண்டலாபிஷேக பூஜைகள் தொடா்ந்து 48 நாள்கள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக நிகழாண்டு திம்மசமுத்திரத்தில் நடைபெற வேண்டிய சிறப்பு அபிஷேக நிகழ்ச்சி ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. உற்சவா் ஏகாம்பரநாதருக்கும், ஏலவாா்குழலிக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.