உலகளந்த பெருமாள் கோயில் முகப்பு
உலகளந்த பெருமாள் கோயில் முகப்பு

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத பிரமோற்சவம் இன்று தொடக்கம்

Published on

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 31 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

54-ஆவது திவ்யதேசமாக உள்ள ிக்கோயில் தை மாத பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலையில் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருகிறாா். விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வரவுள்ளாா்.

வரும் 25 -ஆம் தேதி காலையில் கருட வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.

29-ஆம் தேதி வியாழக்கிழமை தேரோட்டமும், 31 -ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்துடனும் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் தலைமையில் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com