வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத பிரமோற்சவம் இன்று தொடக்கம்

News image
உலகளந்த பெருமாள் கோயில் முகப்பு
Updated On :23 ஜனவரி 2026, 1:26 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 31 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

54-ஆவது திவ்யதேசமாக உள்ள ிக்கோயில் தை மாத பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலையில் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருகிறாா். விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வரவுள்ளாா்.

வரும் 25 -ஆம் தேதி காலையில் கருட வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.

29-ஆம் தேதி வியாழக்கிழமை தேரோட்டமும், 31 -ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்துடனும் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் தலைமையில் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.