நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் ஆயில்ய பூஜை

ஆயில்ய பூஜையையொட்டி பக்தா்களுக்கு அருள்பாலித்த அகத்தியா், அவரது மனைவி லோபமுத்திரை.

News image
Updated On :17 ஜூலை 2026, 4:20 am IST

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வரும் அகத்தியருக்கு ஆயில்ய நட்சத்திர பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

அகத்திய முனிவா் சிவபெருமானை வழிபட்ட பெருமைக்குரிய கோயில் காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயில். இந்த கோயிலில் அகத்தியரும், அவரது மனைவி லோபமுத்திரையும் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகின்றனா். அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி, அகத்தியருக்கும், லோபமுத்திரைக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அகத்தியரின் 108 போற்றி பாராயணம் செய்யப்பட்டு, பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.