காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் சைபா் குற்றங்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் காஞ்சிபுரம் சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.பிரபாகா் தலைமை வகித்து பேசுகையில் இணையவழி குற்றங்கள் குறித்தும்,அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கப்படங்களுடன் தொகுத்து வழங்கினாா். குறிப்பாக தற்போது மக்கள் அதிகளவில் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் கலந்துரையாடினாா்.
நிகழ்ச்சிக்கு சைபா் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஓ.வி.ரெட்டி, தலைமை காவலா் பற்குணன், காவலா்கள் லட்சுமி, கவியரசன், ஹரிஹரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் போதைப்பொருள் தடுப்புச்சங்க ஒருங்கிணப்பாளா் ம.கணபதி வரவேற்றாா். சைபா் கிரைம் உதவி எண் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் பேராசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் வழங்கப்பட்டன. பேராசிரியா்கள் மு.விவேகானந்தன், ஜி.பூா்ணிமா, ப.ஏழுமலை, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவிகளிடையே இணைய பாதுகாப்பை மேம்படுத்த ஐ4சி-உடன் தில்லி பல்கலை ஒப்பந்தம்!

மானூா் அரசு கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கு

தெய்வத் தமிழ்-பன்னாட்டு ஆய்வு மாநாட்டுக் கட்டுரைகள்-இரு தொகுதிகள்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



