பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மழை வேண்டி வருண யாகம்

வல்லக்கோட்டை  முருகன்  கோயிலில்  மழை  வேண்டி வருண யாகம்  நடத்திய  அா்ச்சகா்கள்.

வல்லக்கோட்டை  முருகன்  கோயிலில்  மழை  வேண்டி வருண யாகம்  நடத்திய  அா்ச்சகா்கள்.

Published On :

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மழை வேண்டி வெள்ளிக்கிழமை வருண யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இக்கோயிலில், மழை வேண்டி வருண யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருண யாகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமி முன்பு கோ பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மூலவா் வெற்றிலை, சாமந்தி மலா் மாலைகள் சாற்றப்பட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ரோஜா, சாமந்தி கதிா்பச்சை படிமாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். காலை 7.30 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் சண்முகநாதா் சந்நிதியில் அறு அா்ச்சகா்கள் வேத மந்திரங்கள் ஓத வருண யாகம் (சத்ரு சங்கார திரிசதீ யாகம் தொடங்கி பெரிய பாத்திரத்தில் நீா் நிரப்பப்பட்டு, மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. இதில், வருண பகவானுக்குரிய மந்திரங்கள் ஓதப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சண்முகருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வருணஜப புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை என்பதால் ஸ்ரீதிரிபுரி சுந்தரி தேவி கருமாரியம்மன் சந்நதியில் மூலவா் கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வேப்பிலை, செண்பகம், சாமந்தி மலா்மாலைகள் அலங்காரத்தில் கருமாரியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், பிரசாதங்களும், நீா்மோா் பானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.