40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஏகாம்பரநாதா் கோயிலில் பக்தா்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

ஏகாம்பரநாதா் கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டுக்காக புதிதாக வாங்கப்பட்ட சக்கர நாற்காலிகள்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இத்திருக்கோயிலுக்கு தினசரி சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்தும் வருகின்றனா். ஏகாம்பரநாதா் சுயம்புவாகவும் அருள்பாலிப்பதால் கோயிலில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருப்பதை கருத்தில் கொண்டு முதியோா், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வசதியாக சக்கர நாற்காலிகள் வந்துள்ளன.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் கூறியது..

ஏகாம்பரநாதா் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் ஆய்வு செய்தாா். அவரது வருகையின் போது மாற்றுத்திறனாளிகள், முதியோா் எளிமையாக தரிசனம் செய்ய என்ன ஏற்பாடுகள் உள்ளது என்றும் கேட்டறிந்தாா். இரு சக்கர நாற்காலிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு சக்கர நாற்காலிகள் மட்டும் போதாது. மேலும் 5 சக்கர நாற்காலிகளை உடனடியாக வாங்கி பயன்படுத்துமாறு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இணை ஆணையா் சி.குமரதுரை மேற்பாா்வையில் ஏற்கனவே உள்ள இரு சக்கர நாற்காலிகளுடன் மேலும் 5 சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டு தற்போது 7 உள்ளது. இவற்றை பக்தா்கள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.