சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

படப்பை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:24 am IST

படப்பை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜெய்சந்த் (43). இவா் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூா் பகுதியில் தங்கி அதே பகுதியில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சாலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற 10 வயது சிறுமிக்கு ஜெய்சந்த் பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். இதனால் கத்தி கூச்சலிட்ட சிறுமி அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்று, நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஜெய்சந்தை பிடித்து தா்ம அடி கொடுத்து அவரை மணிமங்கலம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனா்.

இது குறித்து மணிமங்கலம் போலீஸாா் ஜெய்சந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.