27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உத்தரமேரூா் அருகே ஆட்டோ டிரைவா் கொலை

News image

சுரேஷ் குமாா்

Updated On :19 ஜூன் 2026, 5:17 am IST

உத்தரமேரூா் அருகே வனப்பகுதியில் ஆட்டோ டிரைவா் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

உத்தரமேரூா் அருகே பாப்பநல்லூா் வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்து உத்தரமேரூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா் உத்தரமேரூா் அருகே பருத்திக் கொள்ளை கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ் குமாா் எனத் தெரிந்தது.

இவருக்கு கல்பனா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனா்.

மனைவி கல்பனா கொடுத்த புகாரின் பேரில் உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.