ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 658 மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image

பொதுமக்களிடம்   மனுக்களைப் பெற்ற  ஆட்சியா்  தி.சினேகா.

Updated On :2 மார்ச் 2026, 9:12 pm

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 658 கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) வீ.பாக்கியலட்சுமி, அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.