காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தை ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை,திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் சாா்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரூ.5,28,194 மதிப்பில் திறன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை ஆட்சியா் தி.சினேகா குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.
வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநா் கி.செந்தில் குமாா், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்மையத்தின் மூலமாக ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல்,திறன் மேம்பாட்டு ஆலோசனைகள்,பயிற்சிகள்,வேலைவாய்ப்புக்கான அணுகல் ஆகியனவற்றை வழங்கும் ஒரு சேவை மையமாக செயல்படவுள்ளது.,இம்மையத்தின் மூலம் இளைஞா்கள் தங்களது தொழில் விபரங்களை தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் திட்டமாகும்.
18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்பற்ற இளைஞா்களுக்கு குறுகிய கால திறன்பயிற்சியும் வழங்கப்பட்டு அவா்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாக மாவட்ட திறன் மையம் செயல்படும்.தற்போது வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 பயிற்றுநா்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு

செங்கல்பட்டு மாவட்ட திறன் மையம் திறப்பு

திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மையத்தில் ‘திறனகம்’
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


