எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வல்லக்கோட்டையில் உலக மகளிா் தின விழா

வல்லக்கோட்டையில் உலக மகளிா் தின விழா

News image
பெண்களுக்கு கோப்பை  வழங்கிய  ஊராட்சி மன்றத்  தலைவா்  மணிமேகலை  தசரதன்.
Updated On :9 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை ஊராட்சியில் மகளிா் தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த பெண்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது.

21 மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கோலப்போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற பெண்களுக்கு பதக்கம், பரிசுப் பொருட்கள் மற்றும் கோப்பைகளை ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை தசரதன் வழங்கினாா். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவா் மணிமேகலை தசரதன் சேலைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தியாகராஜன், வட்டார மகளிா் திட்ட மேலாளா் சிவகாமி, வல்லக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் வெண்ணிலா, வாா்டு உறுப்பினா்கள், மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.