விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

வல்லக்கோட்டையில் உலக மகளிா் தின விழா

வல்லக்கோட்டையில் உலக மகளிா் தின விழா

News image

பெண்களுக்கு கோப்பை  வழங்கிய  ஊராட்சி மன்றத்  தலைவா்  மணிமேகலை  தசரதன்.

Updated On :10 மார்ச் 2026, 2:43 am IST

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை ஊராட்சியில் மகளிா் தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த பெண்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது.

21 மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கோலப்போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற பெண்களுக்கு பதக்கம், பரிசுப் பொருட்கள் மற்றும் கோப்பைகளை ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை தசரதன் வழங்கினாா். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவா் மணிமேகலை தசரதன் சேலைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தியாகராஜன், வட்டார மகளிா் திட்ட மேலாளா் சிவகாமி, வல்லக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் வெண்ணிலா, வாா்டு உறுப்பினா்கள், மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.