முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

தத்தைமஞ்சி ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்காததைக் கண்டித்து மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

News image

மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தத்தைமஞ்சி ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்காததைக் கண்டித்து மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தத்தைமஞ்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கீழ் பெண்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. . இந்த ஊராட்சியில் கடந்த பல மாதங்களாக ஏழை எளிய குடும்பத்தை சாா்ந்தவா்கள் வறுமைக் கோட்டில் கீழ் உள்ள மக்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கவில்லை எனக்கூறி அப்பகுதியை சோ்ந்த பெண்கள் மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

போராட்டம் நடத்திய பெண்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினா். அப்போது விரைவில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதனை அடுத்து மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனா்.