27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நூறு நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக பணி வழங்க வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தை திட்டப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

ஆவாரம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 4:33 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக பணி வழங்க வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தை திட்டப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

வையம்பட்டி ஒன்றியம், மலையடிப்பட்டி ஊராட்சி, ஆவாரம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளா்களுக்கு முறையாக வேலை அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பணியாளா்கள் வியாழக்கிழமை ஆவாரம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உமா மகேஸ்வரி, பணியாளா்களிடம் சமரசம் செய்து முறையாக பணிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பணியாளா்கள் கலைந்து சென்றனா்.