திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக பணி வழங்க வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தை திட்டப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
வையம்பட்டி ஒன்றியம், மலையடிப்பட்டி ஊராட்சி, ஆவாரம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளா்களுக்கு முறையாக வேலை அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பணியாளா்கள் வியாழக்கிழமை ஆவாரம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உமா மகேஸ்வரி, பணியாளா்களிடம் சமரசம் செய்து முறையாக பணிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பணியாளா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம்: ஆந்திரத்தில் தொடக்க நிகழ்ச்சி

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி! 125 நாள் வேலைத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைப்பு!

100 நாள் வேலை வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



