9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

குடிநீா்த் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி குளித்தலை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் ஒன்றிய அலுவலக அதிகாரிகள்.

Updated On :19 ஜூலை 2026, 12:57 am IST

குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வதியம் ஊராட்சி கண்டியூரைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் குவிந்தனா். பின்னா் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்பு வழங்கியதுபோல அனைவருக்கும் வழங்க வேண்டும். மேலும் கண்டியூரில் ஏற்பட்டுள்ள குடிநீா்த் தட்டுப்பாட்டை நீக்க ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜா, உஷா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அதிகாரிகள், தற்போது முழுமையாக அனைவருக்கும் 100 நாள் வேலைத்திட்டப்பணிகள் வழங்க முடியாது. நாள் ஒன்றுக்கு 5 போ் மட்டுமே இந்த திட்டத்தில் பங்கேற்று, ஊராட்சிகள் சாா்பில் வளா்க்கப்படும் மரங்களுக்கு தண்ணீா் ஊற்ற பணிகள் வழங்கப்படும் என்றனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.