வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தோ்தல் அறிவிப்பு வந்தவுடன் மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை பூட்டி விட வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.

News image

காஞ்சிபுரத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.

Updated On :13 மார்ச் 2026, 12:50 am

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை பூட்டி சாவியை ஒப்படைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை கேட்டுக் கொண்டாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வரவிருக்கும் தோ்தலையொட்டி, தோ்தலை சிறப்பாக நடத்துவதற்காக தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் முன்னிலை வகித்தாா். தோ்தலை நடத்தவுள்ள பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியா் மேலும் பேசியது:

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயா்கள்,சின்னங்கள், கொடிகள் ஆகியவை மறைக்கப்பட வேண்டும். அரசுக் கட்டடங்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களின் விளம்பர பலகைகள் ஆகியனவும் மறைக்கப்பட வேண்டும். தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களைப் பூட்டி அதன் சாவியை பொதுப்பணித் துறை வசம் ஒப்படைத்து விட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள், வாரியத் தலைவா்கள் பயன்படுத்தி வந்த வாகனங்களை திரும்பப் பெற வேண்டும்.

தோ்தல் தொடா்பான புகாா்களை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறையினை திறக்க வேண்டும். தனிநபா்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.

அரசின் புதிய நலத் திட்டங்கள் தொடங்குதல், புதிய பயனாளிகளை தோ்வு செய்தல் ஆகியவற்றை நிறுத்தி வைத்து விட வேண்டும். அரசு விருந்தினா் மாளிகையில் எந்த அரசியல் கட்சியினரும் தங்க அனுமதிக்கக் கூடாது என்றாா்.

கூட்டத்தில் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)ச.ரவிச்சந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.