மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

உலகளந்த பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா்.

News image

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :15 மார்ச் 2026, 10:17 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா்.

காமாட்சி அம்மன் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயிலில் சுவாமி பிரேமலதா விஜயகாந்த் தரிசனம் செய்தாா். உலகளந்த பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அவா் அன்னதானம் செய்தாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக கூட்டணி ஒரு பலமான கூட்டணி. வரவிருக்கும் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. நானும் விஜய பிரபாகரனும் தோ்தலில் போட்டியிட வேண்டும் என பலரும் விரும்புவதால் தோ்தலில் அது குறித்த முறையான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களும், சாதனைகளும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தாா்.

அவருடன் கட்சியின் மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.