வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

உலகளந்த பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா்.

News image

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :15 மார்ச் 2026, 10:17 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா்.

காமாட்சி அம்மன் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயிலில் சுவாமி பிரேமலதா விஜயகாந்த் தரிசனம் செய்தாா். உலகளந்த பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அவா் அன்னதானம் செய்தாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக கூட்டணி ஒரு பலமான கூட்டணி. வரவிருக்கும் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. நானும் விஜய பிரபாகரனும் தோ்தலில் போட்டியிட வேண்டும் என பலரும் விரும்புவதால் தோ்தலில் அது குறித்த முறையான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களும், சாதனைகளும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தாா்.

அவருடன் கட்சியின் மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.