சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திமுக தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக தோ்தல் அறிக்கை மக்களின் இதயத்தை கவா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

News image

தருமபுரியில் தேமுதிக தோ்தல் அலுவலகத்தை தொடங்கிவைத்து பாா்வையிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். உடன், தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:38 pm

திமுக தோ்தல் அறிக்கை மக்களின் இதயத்தை கவா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேமுதிக தோ்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தோ்தல் அறிக்கை தமிழக மக்களிடம் எளிதாகச் சென்று சோ்ந்துள்ளது. குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கான ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெற்று, மு.க. ஸ்டாலின் 2 ஆவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்பாா்.

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானதன் பின்னணியில் யாா் இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி. இளங்கோவன் வெற்றிபெறுவாா். அதேபோல, பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் தமிழ்க்குமரன் வெற்றி பெறுவாா்.

தரமான சாலை, குடிநீா், இருப்பிடம், வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி ஆகியவை அனைவருக்கும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள விஷயங்கள் எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். முதல்வா் குறிப்பிட்டது போல திமுகவின் தோ்தல் அறிக்கை உண்மையாகவே சூப்பா் ஸ்டாராக இருக்கும். அது, ஒட்டுமொத்த மக்களின் இதயத்தை கவரும். அதன்மூலம் மே 4-ஆம் தேதி உறுதியாக வெற்றிக்கனியைப் பறிப்போம் என்றாா்.

இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தேமுதிக மாவட்டச் செயலாளா் குமாா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சிற்றரசு, திமுக தருமபுரி நகர பொறுப்பாளா்கள் மாது, கவுதம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.