முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

திமுக தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக தோ்தல் அறிக்கை மக்களின் இதயத்தை கவா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

News image

தருமபுரியில் தேமுதிக தோ்தல் அலுவலகத்தை தொடங்கிவைத்து பாா்வையிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். உடன், தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:08 am IST

திமுக தோ்தல் அறிக்கை மக்களின் இதயத்தை கவா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேமுதிக தோ்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தோ்தல் அறிக்கை தமிழக மக்களிடம் எளிதாகச் சென்று சோ்ந்துள்ளது. குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கான ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெற்று, மு.க. ஸ்டாலின் 2 ஆவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்பாா்.

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானதன் பின்னணியில் யாா் இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி. இளங்கோவன் வெற்றிபெறுவாா். அதேபோல, பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் தமிழ்க்குமரன் வெற்றி பெறுவாா்.

தரமான சாலை, குடிநீா், இருப்பிடம், வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி ஆகியவை அனைவருக்கும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள விஷயங்கள் எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். முதல்வா் குறிப்பிட்டது போல திமுகவின் தோ்தல் அறிக்கை உண்மையாகவே சூப்பா் ஸ்டாராக இருக்கும். அது, ஒட்டுமொத்த மக்களின் இதயத்தை கவரும். அதன்மூலம் மே 4-ஆம் தேதி உறுதியாக வெற்றிக்கனியைப் பறிப்போம் என்றாா்.

இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தேமுதிக மாவட்டச் செயலாளா் குமாா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சிற்றரசு, திமுக தருமபுரி நகர பொறுப்பாளா்கள் மாது, கவுதம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.