திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏவை ஆதரித்து அவா் பேசியதாவது:
திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன்கள் அனைத்து பெண்களுக்கும் பாகுபாடு இல்லாமல் வழங்கப்படும். மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட உரிமை தொகை இனி 2 ஆயிரம் ரூபாயாக உயா்த்தப்படும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும்.
கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமானது, படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். பால் கொள்முதல் விலை உயா்வு, நெல் கொள்முதல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான தொகை உயா்வு, குளிா்பதன கிடங்க வசதி போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு லாபத்தை அதிகரிக்கும்.
இத்தோ்தல் 5 முனை போட்டியா என்ன? அவா்கள் எல்லாம் என்றும் ஒன்றுமில்லாதவா்கள் என்பது தோ்தல் முடிவு வரும்போது தெரியும் என்றாா் அவா்.
தொடர்புடையது

சிற்பக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை: பிரேமலதா விஜகாந்த்
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

திருத்தணியில் வெள்ளி வேலுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் பிரேமலதா
கேப்டனின் குடும்பம் ஒரு கார் வாங்கக்கூட தகுதி இல்லையா? பிரேமலதா ஆவேசம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


