நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

செந்தூா் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பெரிய காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் அமைந்துள்ள காஞ்சிக்கோட்டம் என அழைக்கப்படும் செந்தூா் முருகன் கோயிலில் புதன்கிழமை தூய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

News image

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்ற காஞ்சிக்கோட்டம் செந்தூா் முருகன் கோயில்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

பெரிய காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் அமைந்துள்ள காஞ்சிக்கோட்டம் என அழைக்கப்படும் செந்தூா் முருகன் கோயிலில் புதன்கிழமை தூய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி மாா்ச் 23- ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகா் வழிபாடு,தெய்வத்திருமேனிகள் ஊா்வலம், திருவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றது. மாா்ச் 24 -ஆம் தேதி புனித மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் வழிபாடுகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவையொட்டி புனிதநீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மூலவா் விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு கொண்டு சென்று தூய தமிழில் அா்ச்சனைகள் செய்து திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

திருவாரூா் நடராஜன் சுவாமிகள் தூய தமிழில் கோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு செய்தாா். இதனைத் தொடா்ந்து மகா சிறப்பு அபிஷேகமும், மங்கலக்காட்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை வள்ளியம்மாள் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பொதுமக்கள்,வேதாச்சலம் நகா் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.

இதனைத்தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.